Begin typing your search above and press return to search.
தென்காசி: அரசுபேருந்துகள் இயங்கும் விபரங்கள்
தென்காசி மாவட்டத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் குறித்து அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு.
HIGHLIGHTS
தமிழகத்தில் இரவு நேர முழு ஊரடங்கு 20.04.2021 முதல் அமுல்படுத்தப்படுவதை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தென்காசியிலிருந்து இயக்கப்படும்.
பேருந்துகளின் இயக்க நேரம் கீழ்க்கண்டவாறு மாற்றம் செய்யப்படுகிறது.
1. தென்காசியிலிருந்து – திருநெல்வேலி காலை 4.00 மணி முதல் இரவு 20.00 மணி வரை இயக்கப்படும்.
2. தென்காசியிலிருந்து – அம்பை காலை 4.00 மணி முதல் இரவு 20.00 மணி வரை இயக்கப்படும்.
3. தென்காசியிலிருந்து – மதுரை காலை 4.00 மணி முதல் இரவு 18.00 மணி வரை இயக்கப்படும்.
4. தென்காசியிலிருந்து – சங்கரன்கோவில் காலை 4.00 மணி முதல் இரவு 20.00 மணி வரை இயக்கப்படும்.
இவை தவிர தொலைதூர இடங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் பகல் நேரத்தில் மட்டுமே இயக்கப்படும் என பொது மேலாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.