/* */

தென்காசியில் முன் கள பணியாளர்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்

தென்காசியில் முன் கள பணியாளர்களுக்கு கோவிட் - 19 சிறப்பு முன் எச்சரிக்கை தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

தென்காசியில் முன் கள பணியாளர்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்
X

தென்காசியில் முன் கள பணியாளர்களுக்கு சிறப்பு முன் எச்சரிக்கை தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

தென்காசியில் முன் கள பணியாளர்களுக்கு கோவிட் - 19 சிறப்பு முன் எச்சரிக்கை தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

உலகம் முழுவதும் கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தமிழகத்திலும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் வேகமாக பரவி வருகிறது.

இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் 2 தடுப்பூசி செலுத்தி கொண்ட முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இன்று, முதல் செலுத்தப்படுகிறது. அதன்படி தென்காசி மாவட்டம் அரசு தலைமை மருத்துவமனையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் முகாம் இன்று தொடங்கியது. முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் கோபாலசுந்தர் ராஜ் தலைமை தாங்கினார்.

முகாமில் மாவட்ட செயலாளர்கள் சிவபத்மநாதன், செல்வத்துரை, தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், சங்கரன்கோவில் சட்ட மன்ற உறுப்பினர் ராஜா, வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலைக்குமார், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் உதயகிருஷ்ணா, தென்காசி யூனியன் சேர்மன் ஷேக் அப்துல்லா மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் உட்பட மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 11 Jan 2022 7:12 AM GMT

Related News