/* */

இலஞ்சி பேரூராட்சி 3வது வார்டில் பாேட்டியிட பாமக வேட்பாளர் மனு தாக்கல்

இலஞ்சி பேரூராட்சியில் வார்டு உறுப்பினர் பதவிக்கு பா.ம.க சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

இலஞ்சி பேரூராட்சி 3வது வார்டில் பாேட்டியிட பாமக வேட்பாளர் மனு தாக்கல்
X

இலஞ்சி பேரூராட்சியில், 3-ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஐயப்பன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தென்காசி மாவட்டம் இலஞ்சி பேரூராட்சியில் வார்டு உறுப்பினர் பதவிக்கு பா.ம.க சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.

தென்காசி மாவட்டத்திலுள்ள தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில், கடையநல்லூர், செங்கோட்டை, சுரண்டை ஆகிய 6 நகராட்சிகளுக்கும், ஆலங்குளம், சாம்பவர் வடகரை, ஆய்க்குடி, சுந்தரபாண்டியபுரம், அச்சன்புதூர், ஆழ்வார்குறிச்சி, குற்றாலம், உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள 17 பேரூராட்சிகளுக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது.

நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இன்று இறுதி நாள் என்பதால் ஏராளமான அரசியல் கட்சி பிரமுகர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். தென்காசி மாவட்டம் இலஞ்சி பேரூராட்சியில், 3-ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஐயப்பன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

வேட்புமனு தாக்கல் செய்யும் போது தென்காசி மத்திய மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து, மாநில துணைத்தலைவர் ஐயம்பெருமாள், வடக்கு மாவட்ட செயலாளர் டாக்டர்.சீதாராமன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சாகுல் ஹமீது மற்றும் தண்டபாணி, ராம்குமார் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தென்காசி மாவட்டத்தில் 6 நகராட்சிகளில் 180 வார்டுகளுக்கு, இன்று வரை 1057 வேட்பு மனுக்களும், 17 பேரூராட்சிகளில் 260 வார்டுகளுக்கு, 1181 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

Updated On: 5 Feb 2022 5:56 AM GMT

Related News