/* */

தென்காசி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் திறப்பு

தென்காசி அரசு மருத்துவமனையில், ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை, மாவட்ட வருவாய் அலுவலர் திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

தென்காசி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் திறப்பு
X

தென்காசி அரசு மருத்துவமனையில், ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை,  மாவட்ட வருவாய்அலுவலர் இரா.ஜனனி சௌந்தர்யா திறந்து வைத்தார்.

தென்காசி மாவட்டத்தில் தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் 1000LPM(litres per minute) அளவிலான ஆக்சிஜன் உற்பத்தி நிலையம், சுமார் 1.2 கோடி அளவில் நிறுவப்பட்டுள்ளது. இவற்றை நாடு முழுவதும் நேற்று, காணொளி வாயிலாக பிரதமர் திறந்து வைத்தார்.

அதை தொடர்ந்து, தென்காசி மாவட்ட தலைமை அரசுமருத்துவமனையில் தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜனனி சவுந்தர்யா தலைமை வகித்து ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையத்தை திறந்து வைத்தார். மேலும், PSA plant உபகரணங்களை தொடங்கி வைத்து அவற்றை பார்வையிட்டார்.

இங்கு, 1000 கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் பிளான்ட் மூலம் நோயாளிகள் தடையின்றி தொடர்ந்து ஆக்சிஜன் கிடைக்கப்பெறுவர். இதன் மூலம் இனி தென்காசி மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இன்றி கிடைக்கப் பெற்று, பொதுமக்கள் பயன் பெறுவர் என்று தெரிவித்தார்கள். இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.ஜெஸ்லின், மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 8 Oct 2021 12:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...