தென்காசி மாவட்டத்தில் நாளைய மின்தடை பகுதிகள் அறிவிப்பு
தென்காசி மாவட்டத்தில் நாளைய மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டத்தில் நாளைய மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி கோட்ட செயற்பொறியாளர் கற்பக விநாயக சுந்தரம் செய்தி குறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார் அதில் கூறப்பட்டிருப்பதாவது: -
தென்காசி, செங்கோட்டை, சுரண்டை மற்றும் சாம்பவர் வடகரை உப மின் நிலையங்களில் 03 02 2024 சனிக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் கீழ்கண்ட ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
தென்காசி, மேலகரம், நன்னகரம், குடியிருப்பு, குற்றாலம், காசிமேஜர்புரம், இலஞ்சி, அய்யாபுரம், குத்துக்கல்வலசை, இலத்தூர், ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, மத்தாளம் பாறை, திரவியநகர், ராமச்சந்திர பட்டணம், மேலமெஞ்ஞானபுரம், செங்கோட்டை, கணக்கப்பிள்ளை வலசை, பெரிய பிள்ளை வலசை, பிரானூர், வல்லம், கற்குடி, புளியரை, தெற்கு மேடு, பூலாங்குடியிருப்பு, கட்டளை குடியிருப்பு, சுரண்டை, இடையர் தவணை, குலையனேரி, இரட்டைக் குளம், சுந்தரபாண்டியபுரம், பாட்டாக்குறிச்சி, வாடியூர், ஆனைக்குளம், கரையாளனூர், அச்சங்குன்றம், சாம்பவர் வடகரை, சின்னத்தம்பி நாடானூர், பொய்கை, கோவிலாண்டனூர், கள்ளம்புளி, M. C பொய்கை, துரைச்சாமிபுரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.