தென்காசியில் நேதாஜி சுபாஷ் சேனை தலைவர் கைது
மேலப்பாவூரில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் நேதாஜி சுபாஷ் சேனை வழக்கறிஞர் மகாராஜன் கைது செய்யப்பட்டார்.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள மேலப்பாவூர் கிராமத்தில் அனுமதியில்லாமல் சமுதாய கொடியேற்றிய விவகாரம் மற்றும் சுவரொட்டி சேதப்படுத்திய விவகாரம் அடுத்தடுத்து நடைைபெற்றதை ஓட்டி இருதரப்பினருக்கிடையே ஏற்பட்ட தகராறில் தொடர்ந்து 5நாட்களுக்கு மேலாக பதற்றமான சூழல் நிலவுகிறது.
ஒரு தரப்பினர் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவதாக வந்த தகவலையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூன்றடுக்கு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் புதிய பேரூந்து நிலையம் ஆசாத் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இருதரப்பினருக்கிடையே சுமூகமான சூழல் ஏற்படாத நிலையில், இந்த விவகாரம் அடுத்தடுத்து சிறு குறு கிராமங்களில் போராட்டம் நடத்த ஒரு பிரிவினர் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. இதனிடையே சுபாஷ் சேனை அமைப்பின் தலைவர் வழக்கறிஞர் மகாராஜன் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து சமாதானம் பேச செல்லும் வழியில் அவரை தென்காசி மாவட்ட காவல் துறையினர் கைது செய்து விடிய விடிய விசாரணை நடத்தி நேற்று காலை தென்காசி நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர்.
ஏற்கனவே அம்பாசமுத்திரம் பகுதியில் பல்லை பிடுங்கிய விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு அந்த விவகாரத்தில் போராடி ஏ.எஸ்.பி மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முக்கிய காரணமாக இருந்தவர் சுபாஷ் சேனை தலைவர் வழக்கறிஞர் மகாராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பிரச்சினை சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம் சரிவர நடவடிக்கை எடுக்காத நிலையில் ஒரு தரப்பினர் தங்களது வீடுகள் தெருக்களில் கருப்பு கொடி கட்டி உள்ளனர். தங்களது ரேஷன்கார்டுகளை மாவட்ட ஆட்சியர் வசம் ஒப்படைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலப்பாவூர் மற்றும் தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் தென்கா,சி திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி என 4 மாவட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.