/* */

தமிழக கேரள எல்லை அருகே ஆவணங்களின்றி பஸ்சில் கொண்டு சென்ற ரூ.28 லட்சம் பறிமுதல்

Money Seized -பறிமுதல் செய்த பணம் ஹவாலா பணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

HIGHLIGHTS

Money Seized | Tenkasi News
X

Money Seized -தமிழக எல்லை அருகே கேரளாவில் ஆவணங்களின்றி அரசு பஸ்சில் கொண்டு சென்ற ரூ.28 லட்சம் பணத்தை போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தென்காசி மாவட்டம், செங்கோட்டை புளியரை அருகே கேரள மாநில ஆரியங்காவு சோதனை சாவடி உள்ளது. தற்போது அனைத்து சோதனை சாவடிகளிலும் சோதனை அதிகப்படுத்தியுள்ள நிலையில், ஆரியங்காவு செக் போஸ்டில் ஆவணங்களின்றி அரசு பஸ்சில் கொண்டு சென்ற ரூ.28 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தப் பணம் ஹவாலா பணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசியிலிருந்து திருவனந்தபுரத்திற்கு கேரள அரசு பஸ் புறப்பட்டது. இது தமிழகத்தில் உள்ள சோதனை சாவடிகளை கடந்து கேரள முதல் சோதனை சாவடியான ஆரியங்காவு செக் போஸ்ட்டில் இந்த அரசு பஸ்சை நிறுத்தி சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது கடையநல்லூரைச் சேர்ந்த முகமது அக்ரம் என்பவர் வைத்திருந்த பையில் முறையான ஆவணங்கள் இல்லாமல் ரூ.28 லட்சம் வைத்திருந்தது, கண்டுபிடிக்கப்பட்டது. அதை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர். விசாரணையில் கேரளாவிற்கு தங்கம் வாங்குவதற்கு செல்வதாக முகமது அக்ரம் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் அந்தப் பணத்தை சுங்கத் துறையினர் தென்மலை போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து தற்போது பணத்தை பறிமுதல் செய்து தென்மலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 29 Sep 2022 7:26 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!