/* */

தென்காசியில் சிறந்த பணிக்காக 242 பேருக்கு பதக்கங்கள்: ஆட்சியர் வழங்கல்

தென்காசியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

HIGHLIGHTS

தென்காசியில் சிறந்த பணிக்காக 242 பேருக்கு பதக்கங்கள்: ஆட்சியர் வழங்கல்
X

காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர்.

தென்காசியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு சிறந்த பணிக்காக 242 பேருக்கு பதக்கங்களை ஆட்சியர் வழங்கினார்.

குடியரசு தின விழாவானது இன்று நாடு முழுவதும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தென்காசி மாவட்டம், தென்காசி நகர பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் குடியரசு தின விழாவானது வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

குடியரசு தின விழாவை முன்னிட்டு பள்ளி விளையாட்டு திடலில் அமைக்கப்பட்டிருந்த தேசியக்கொடியை மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.ரவிச்சந்திரன் ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய நிலையில் அவருடன் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உடன் இருந்தார்.

தொடர்ந்து, காவல்துறை, வனத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட 36 துறைகளில் சிறந்த பணியாற்றிய 242 அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை. ரவிச்சந்திரன் மற்றும் காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் ஏற்றுக்கொண்ட நிலையில், இந்த நிகழ்வில் தென்காசி மாவட்டத்தில் உள்ள பல்வேறு துறை உயர் அதிகாரிகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Updated On: 26 Jan 2024 5:44 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!