Begin typing your search above and press return to search.
பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி: பழனி நாடார் எம்எல்ஏ தொடங்கி வைப்பு
பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியை பழனி நாடார் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
HIGHLIGHTS
தென்காசியில் ஸ்பெக்ட்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் பாரதியார் தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு குறுவட்ட அளவிலான கால்பந்து போட்டி இ.சி.ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் கலந்து கொண்டு கால்பந்து போட்டி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து போட்டியை தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் 28 அணிகள் கலந்து கொள்கிறது.
இதில் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் சந்தோஷ், நகர பொருளாளர் ஈஸ்வரன், தேவேந்திரன், சித்திக், மருத்துவர் கிருஷ்ணகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.