சங்கரன்கோவிலில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
சங்கரன் கோவிலில் அதிமுக எம்ஜிஆர் மன்றம் சார்பில் நீர்மோர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.
HIGHLIGHTS
பட விளக்கம்: சங்கரன் கோவிலில் அதிமுக எம் ஜி ஆர் மன்றம் சார்பில் நீர்மோர் பொதுமக்களுக்கு வழங்கிய போது எடுத்த படம்.
தமிழகம் முழுவதும் தற்போது கோடை வெயில் வாட்டி வதக்கி வருகிறது. இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. அவ்வப்போது கோடை மழை பெய்து வெப்பத்தை தனித்து வருகிறது கோடை வெயிலை சமாளிக்க பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் பல்வேறு இடங்களில் நீர் மோர் பந்தல் திறந்து வைதது பொதுமக்களின் தாகங்களை தீர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் சங்கரன்கோவிலில் அதிமுக மாவட்ட எம்ஜிஆர் மன்றம் சார்பில் பொதுமக்களுக்கு வழங்கிய இளநீர், மோர், நுங்கு, தர்பூசணி, வெள்ளரிக்காய், ஆகிவற்றை அதிமுக நகர்மன்ற துணைத்தலைவர் வழங்கினார். இதில் நகர்மன்ற உறுப்பினர்கள் உட்பட ஏரளமான அதிமுகவினர் கலந்துகொண்டனர்..
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரக்கூடிய நிலையில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பேருந்து நிலையம் அருகே பொதுமக்களுக்கு நீர்;, மேர், நுங்கு, தர்பூசனி, கொய்யாப்பழம், வெள்ளரிக்காய், இளநீர், முந்திரிப்பழம், ஆகிவற்றினை கோடை வெயில் முடியும் வழங்குவதற்கு அதிமுக மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளரும் நகர்மன்ற துணைத்தலைவருமான கண்ணன் என்ற ராஜீ பொதுமக்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார்..இதில் அதிமுக முக்கிய நிர்வாகிகள், பேச்சாளர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் உட்பட ஏரளமான பொதுமக்களுடன் கட்சி தொண்டர்களும் கலந்துகொண்டனர்.