Begin typing your search above and press return to search.
சட்டவிரோதமாக மது விற்பனை: 7 பேர் கைது
தென்காசி மாவட்டம்,மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் IPS உத்தரவின் பேரில், மாவட்டமெங்கும் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த 7 நபர்களை ரோந்து பணியில் இருந்த காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 164 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.