தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில் இலவச பயிற்சி
தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக இலவச பயிற்சி நடைபெறுகிறது.
HIGHLIGHTS
இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-தொகுதி 1 அடங்கிய துணை ஆட்சியர் உட்பட பல்வேறு வகையான 92 காலிப்பணியிடங்களுக்கு அறிவிக்கை 21.07.2022 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி ஏதேனும் பாடப்பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொது பிரிவினர் 21 முதல் 34 வயதிற்கு உட்பட்டவராகவும், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் 21 முதல் 39 வயதிற்கும் உட்பட்ட ஆண்/ பெண் / மூன்றாம் பாலினத்தைச் சார்ந்தவர்கள் 22.08.2022 க்குள் www.tnpsc.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
இப்பணியிடத்திற்கான இலவச பயிற்சி வகுப்பு தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக 25.08.2022 அன்று முதல் நேரடியாக நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்ள விரும்பும் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்வலர்கள் அலுவலக பணி நாட்களில் நேரடியாக வருகை புரிந்து முன்பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விபரங்களுக்கு 04633-213179 என்ற தொலைபேசி எண்ணில் அல்லது deotenkasi22@gmail.com என்ற மின்னஞ்சல் வாயில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.