Begin typing your search above and press return to search.
தேர்தல் புகார்களுக்கு உடனடி தீர்வு- பார்வையாளர் அறிவிப்பு
தென்காசி மாவட்டத்தில் தேர்தல் சம்பந்தமான புகார்களுக்கு உடனடி தீர்வு வழங்கப்படும் என தேர்தல் காவல்துறை பார்வையாளர் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமையில் தென்காசி மாவட்டத்திலுள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் காவல்துறை பார்வையாளர் திலீப் சுவாமி வேட்பாளர்களுடன் பேசுகையில் தேர்தல் சம்பந்தமாக எந்த ஒரு புகாராக இருந்தாலும் தனது தனிப்பட்ட தொடர்பு எண்ணிற்கு 7548835008 எந்த ஒரு தயக்கமும் இன்றி தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்,அதற்கு உடனடியாக தீர்வு காணப்படும் என்று கூறினார். இக்கூட்டத்தில் மாவட்ட எஸ்பி., சுகுணா சிங் ,கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.