Begin typing your search above and press return to search.
தென்காசியில் பெய்த மழையால் கழிவு நீர் ஓடைகள் பாதிப்பு: எம்.எல்.ஏ. ஆய்வு
தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் மழையால் பாதித்த பகுதிகளை எம்எல்ஏ பழனி நாடார் பார்வையிட்டார்.
HIGHLIGHTS
தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளத்தால் பாதித்த பகுதிகளை எம்எல்ஏ பார்வையிட்டார்.
தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் கழிவு நீர் ஓடைகள் பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தென்காசி நகராட்சிக்குட்பட்ட 33வது வார்டு பகுதியில் கழிவு நீரோடைகளை ஆய்வு செய்து பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் மற்றும் பொறியாளரிடம் அலைபேசியில் அழைத்து விரைவில் போர்க்கால அடிப்படையில் பணிகள் நடக்க கோரிக்கை விடுத்தார் அதிகாரிகளும் உடனடியாக பணிகளை சரி செய்வதாக தெரிவித்தனர்.