/* */

சுரண்டை இரட்டைகுளத்தில் முதியவர் சடலம் மீட்பு - போலீசார் விசாரணை

சுரண்டை இரட்டைகுளத்தில் முதியவர் சடலம் மீட்கப்பட்ட நிலையில் இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

HIGHLIGHTS

சுரண்டை இரட்டைகுளத்தில் முதியவர் சடலம் மீட்பு - போலீசார் விசாரணை
X

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள சாம்பவர் வடகரை யாதவர் நடுத்தெருவை சேர்ந்தவர் பொன்னையா நம்பியார் மகன் ஆனைக்கண்ணு நம்பியார் (வயது 70). இவர் அவருக்கு சொந்தமான மாடுகளை மேய்த்து வருகிறார். தனது மாடுகளை வழக்கம் போல மேய்க்க சாம்பவர் வடகரை ஊரின் கீழ்புறம் உள்ள குலையநேரி கிராம எல்லையில் மேய்த்து வந்துள்ளார்.

இரவில் வெகுநேரமாகியும் மாடுகள் மேய்ந்து தானாக வீட்டுக்கு வந்த நிலையில், ஆனைக்கன்னு நம்பியார் வராததால் உறவினர்கள் தேடிச்சென்று அவர் வழக்கமாக செல்லும் வழியில் தேடியுள்ளனர். ஆனால் குளத்து கரையில் அவரின் செருப்பு மற்றும் துண்டு மட்டும் இருந்துள்ளது. இதனால் இது குறித்து உறவினர்கள் போலீசாருக்கும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். இரவு தேடிய நிலையில் அவரை கண்டறிய இயலவில்லை.

இந்நிலையில் நேற்று காலை ரெட்டைகுளத்தில் மிதந்த நிலையில் ஆனைக்கண்ணு நம்பியார் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உடனடியாக சுரண்டை காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 18 Dec 2021 12:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  2. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  3. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அருமையான பாராட்டு மொழிகள்
  5. வீடியோ
    வாரணாசியில் Modi !ரேபலேரியில் Rahul ! UP மக்கள் யார் பக்கம்? ||#modi...
  6. ஆன்மீகம்
    ஷீரடி சாய்பாபாவின் அற்புதமான பொன்மொழிகள்
  7. வீடியோ
    இந்திய தேர்தலைக் காண வந்துள்ள உலகளாவிய பிரதிநிதிகள் குழு...
  8. வீடியோ
    🔴LIVE: ரசவாதி படத்தின் இசை வெளியீட்டு விழா | Arjun Das | Tanya...
  9. லைஃப்ஸ்டைல்
    'அன்பு' வாழும் 'இல்லம்', கூட்டுக்குடும்பம்..!
  10. வீடியோ
    🔴LIVE :சவுக்கு சங்கர் மேல் கஞ்சா வழக்கில் கைது | பொங்கி எழுந்த சீமான்...