/* */

கீழப்பாவூரில் சிஐடியு சார்பில் பீடி தொழிலாளர்கள் சங்க கூட்டம்

கீழப்பாவூரில் சிஐடியு சார்பில் பீடி தொழிலாளர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

கீழப்பாவூரில் சிஐடியு சார்பில் பீடி தொழிலாளர்கள் சங்க கூட்டம்
X

கீழப்பாவூரில் சிஐடியு மாவட்ட பீடி தொழிலாளர் சங்கம் சங்க கிளை அமைப்பு கூட்டம் நடைபெற்றது.

கீழப்பாவூரில் சிஐடியு மாவட்ட பீடி தொழிலாளர் சங்கம் சங்க கிளை அமைப்பு கூட்டம், அரசன் பீடி கம்பெனி பீடி தொழிலாளர்கள் சங்க கிளை அமைப்பு கூட்டம் சித்திபுத்தி சித்ரா செல்வி தலைமையில் நடைபெற்றது.

பீடி தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் வேல்முருகன் பீடி தொழிலாளர்கள் உரிமைகள் , சலுகைகள் சம்பந்தமாகவும் , இன்றைய காலத்தில் பீடி தொழிலாளர்களின் பாதிப்புகள் , அதற்கான எதிர்ப்பு போராட்டங்கள் , சம்பந்தமாகவும் பேசினார்.

கூட்டத்தில் பீடி தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகிகள் தோழர் மகாவிஷ்ணு, கலா, அய்யாதுரை, பீடி சங்க கீழப்பாவூர் ஒன்றிய பொருளாளரும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருமான கருப்பசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கீழப்பாவூர் நகர செயலாளர் முருகேசன், திமுகவின் நிர்வாகிகள் கீழப்பாவூர் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் பொன் அறிவழகன் மற்றும் ராஜன் பிரஸ் உரிமையாளர் உட்பட 40 பீடி தொழிலாளர்கள் பங்கேற்றனர் கூட்டத்தில் புதிய நிர்வாகிகளாக தலைவர் வி.ஜெயசீலா, துணைத் தலைவர் எஸ் மகேஸ்வரி, செயலாளர் சித்தி புத்தி, சித்ரா செல்வி துணைச் செயலாளர் தெய்வ பார்வதி, பொருளாளர் மாலதி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்.

(1) அரசன் பீடி கம்பெனி கீழப்பாவூர் கிளை 22 வருடமாக செயல்பட்டு வந்த கடையை 7-1-2022 முதல் கடையை அடைத்து வேலை வழங்க மறுத்து வருகிறார்கள் பலமுறை பேசியும் இதுவரை அரசன் பீடி கம்பெனி நிர்வாகம் கடையை கீழப்பாவூரில் திறக்கவில்லை தமிழக அரசும் , மாவட்ட நிர்வாகமும் , தொழிலாளர் நலத் துறையும் உடனடியாக தலையிட்டு அரசன் பீடி கடையை திறந்து வேலை வழங்கிட ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

(2) கடந்த ஓராண்டாக தொழிலாளர்களின் பிஎப் பணத்தை கட்டாமல் மோசடி செய்த அரசன் பீடி நிர்வாகத்தை நடவடிக்கை எடுத்து உடனடியாக வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் செலுத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் (3 )ஓராண்டுக்கு மேலாக 2020-2021 ஆண்டு தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய போனஸ், லீவு சம்பளத்தை உடனடியாக அரசன் பீடி கம்பெனி நிர்வாகம் வழங்கிட தமிழக அரசும், தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுத்திட வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

Updated On: 1 Feb 2022 3:04 AM GMT

Related News