/* */

நெல் கொள்முதல் நிலையம் அமைக்க சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

நெல் கொள்முதல் நிலையம் அமைக்கக்கோரி சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

HIGHLIGHTS

நெல் கொள்முதல் நிலையம் அமைக்க சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
X

தென்காசி மாவட்ட ஆட்சியரை சந்தித்து சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் மனு வழங்கினர்.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவருமான பழனி நாடார் ஆட்சியரை சந்தித்து மனு ஒன்று அளித்து இருந்தார்.

அந்த மனுவில், தென்காசி மாவட்டம் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு தற்போது விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர். தற்போது அறுவடை செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது.

எனவே அரசு வீராணம், சுந்தரபாண்டியபுரம், சுரண்டை, சாம்பவர் வடகரை, சுற்று வட்டாரப் பகுதிகளிலும், ஆலங்குளம் மற்றும் கடையம், கீழ ஆம்பூர், ஆழ்வார்குறிச்சி, மாயமான் குறிச்சி, சம்பன் குளம், பாப்பாக்குடி, மாதாபுரம், திப்பனம்பட்டி, சுற்று வட்டார பகுதிகளிலும், தற்காலிக நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும் போது தென்காசி நகர தலைவர் மாடசாமி ஜோதிடர், பொதுச் செயலாளர்கள் காஜா மைதீன், கணேசன், பொருளாளர் ஈஸ்வரன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 21 Feb 2023 11:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...