அம்பேத்கர் பிறந்தநாள்: பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மரியாதை
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
HIGHLIGHTS
சட்ட மாமேதை அம்பேத்கரின் 132-வது பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி மாவட்டம் நன்னகரத்தில் அம்பேத்கர் முழு உருவச்சிலைக்கு பா.ம.க சார்பில் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாநில பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் கூறியதாவது :ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய விடுதலை போராளி அண்ணல் அம்பேத்கரின் புகழை போற்றும் விதமாக அவரது பிறந்த நாளன்று அவரது உருவச்சிலைக்கு பா.ம.க சார்பில் மரியாதை செலுத்துவதோடு மட்டுமல்லாமல்அவரது நினைவு நாளில் அவரது கொள்கைகளை மக்களிடையே எடுத்து கூறியும் வருகிறது. தமிழகத்தில் ஒரே நாளில் 7 சிலைகளை நிறுவியது பாட்டாளி மக்கள் கட்சி நிறுவன தலைவர் மருத்துவர் அய்யா . அதே போல் தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அம்பேத் கரின் சிலைகளை நிறுவி அவரது கொள்கைகளை நிறைவேற்ற பாடுபடுகின்ற ஒரே கட்சி பாட்டாளி மக்கள் கட்சி.
அம்பேத்கரையும், அவரது சிந்தனைகளையும் மக்களிடையே எடுத்து செல்வதற்கு எங்களை சிறப்பாக வழி நடத்தி வருகிறார் மருத்துர் அய்யா. அவரது கொள்கைகளை செயல்படுத்தும் தலைவரான மருத்துவர் அன்புமணி ராமதாஸ், நடுவண் அரசின், மருத்துவ துறையில் பட்ட மேற்படிப்புக்கு, 70 ஆண்டுகளுக்கு பிறகு இட ஒதுக்கீடு பெற்று தந்து சாதனை படைத்துள்ளார். அந்த வகையில் அம்பேத்கரின் கொள்கைகளை மக்களிடையே எடுத்து செல்ல பா.ம.க தொடர்ந்து பாடுபடும் என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட துணை செயலாளர்கள் ராஜேந்திரன், கிருஷ்ணன், சதீஷ், , மாவட்ட துணைத் தலைவர் மகாதேவன், ஒன்றிய தலைவர்கள் செண்பக குமார், பாலகிருஷ்ணன். ஒன்றிய செயலாளர்கள் சண்முகவேல், கருப்பசாமி, சண்முகசுந்தரம், சிவன்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.