Begin typing your search above and press return to search.
தென்காசி மாவட்டத்தில் புகையிலை, கஞ்சா விற்ற 92 பேர் கைது: எஸ்பி., அதிரடி
தென்காசி மாவட்டத்தில் புகையிலை மற்றும் கஞ்சா விற்பனை செய்ததாக கடந்த 5 நாட்களில் 92 பேரை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் சைலேந்திர பாபு உத்தரவின் பேரிலும், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் அறிவுறுத்தலின் பேரிலும் சட்டவிரோதமாக குட்கா, கஞ்சா விற்பனையை தடுக்கும் பொருட்டு மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 5 நாட்களில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ததாக 72 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 400 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 20 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 5.34 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.