Begin typing your search above and press return to search.
பாவூர்சத்திரத்தில் ரூ.1.5 லட்சம் மதிப்பு புகையிலை பொருட்கள் பறிமுதல்; ஒருவர் கைது
பாவூர்சத்திரத்தில் ரூ.1.5 லட்சம் மதிப்பு புகையிலை பொருட்களை கைப்பற்றி ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புகையிலை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் மாவட்ட தனிப்படை சார்பு ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான காவல்துறையினர் விற்பனைக்காக புகையிலைப் பொருட்களைப் பதுக்கி வைத்திருந்த முருகன்(44) என்ற நபரை கைது செய்தனர்.
மேலும், அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 1,58,000 ரூபாய் மதிப்புள்ள 320 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது