/* */

தென்காசி-குழந்தை திருமணத்தை தடுக்க உதவி எண்கள் அறிவிப்பு

தென்காசி மாவட்டத்தில் குழந்தைத் திருமணத்தைத் தடுக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தென்காசி-குழந்தை திருமணத்தை தடுக்க உதவி எண்கள் அறிவிப்பு
X

தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியீட்டுள்ள செய்தி குறிப்பில் கோவிட் -19 தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கபட்டுள்ள நிலையில், குழந்தை திருமணங்கள் பரவலாக நடைபெறுவது தொடர்பாக தமிழக முதல்வரின் அறிவுரைப்படி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் தலைமையில் 31.05.2021 அன்று மாநில அலுவலர்கள் மற்றும் அனைத்து மாவட்ட அதிகாரிகளுடன் குழந்தை திருமணம் தடுப்பதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதன்படி 18வயது நிறைவடையாத பெண்ணுக்கும் 21வயது நிறைவடையாத ஆணுக்கும் குழந்தை திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்கள் மீதும், ஊக்குவிப்பவர்கள் மீதும், குழந்தை திருமணத்தில் கலந்துகொள்பவர்கள் மீதும் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின்படி முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டணை அல்லது 1லட்சம் அபராதமும் அல்லது இரண்டு தண்டனைகளும் சேர்ந்து விதிக்கப்படும்.

மேலும் குழந்தை திருமணங்கள் உறுதி செய்யப்படும் பட்சத்தில் தகவல் தெரிவிக்க விரும்புவோர் சைல்டுலைன் 1098 என்ற எண்ணிலும், மகளிர் உதவி எண் 181 என்ற எண்ணிலும் பொதுமக்கள் தொடர்புகொள்ளுமாறு அவர் தெரிவித்துள்ளார்.

Updated On: 4 Jun 2021 12:39 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!