/* */

கிணற்றில் போடப்பட்ட அம்மன் சிலை: மீண்டும் பிரதிஷ்டை செய்து மக்கள் வழிபாடு

திசையன்விளை அருகே 12 வருடங்களுக்கு முன்பு கிணற்றில் போடப்பட்ட அம்மன் சிலையை மீண்டும் கோவிலில் வைத்து மக்கள் வழிபாடு செய்தனர்.

HIGHLIGHTS

கிணற்றில் போடப்பட்ட அம்மன் சிலை: மீண்டும் பிரதிஷ்டை செய்து மக்கள் வழிபாடு
X

கிணற்றிலிருந்து எடுத்து பிரதிஷ்டை செய்யப்பட்ட அம்மன் சிலை.

தென்காசி மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள குட்டம் கிராமத்தில், சுமார் 300 வருடம் பழமை வாய்ந்த அருள்மிகு ஆனந்தவல்லி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயிலில் உள்ள பழமை வாய்ந்த ஆதின மூலவர் ஆனந்தவல்லி அம்மன் சிலை இருந்து வந்தது.

இக்கோவிலில் 2010ம் ஆண்டு அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நடந்த சமயத்தில் வழிபாட்டிலிருந்த அமர்ந்த நிலையிலான அம்மன் சிலையை அருகில் இருந்த கிணற்றில் போட்டனர். அதன்பின் நின்ற வடிவிலான புதிய அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்து ஊர் மக்கள் வழிபட்டு வந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் அந்த அம்மன் சிலை தனி நபரால் சேதமடைந்தது. ஊர் மக்கள் அனைவரும் ஒன்றுகூடி 12 வருடங்களுக்கு முன்னர் கிணற்றில் போடப்பட்ட பழைய ஆதின சிலையை மீண்டும் வைப்பதற்கு முடிவு செய்தனர்.

கடந்த அக்டோபர் மாதம் அபிஷேக கிணற்றிலிருந்த ஆனந்தவல்லி அம்மன் சிலையை எடுத்து அதற்கு எண்ணை அபிஷேகம் நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் மீண்டும் பிரசன்னம் பார்த்து முன்னோர்களால் பல்லாயிரம் வருடம் வழிபட்டு வந்த உட்கார்ந்த நிலையில் உள்ள ஆனந்தவல்லி அம்மன் சிலையை முறைப்படி பிரதிஷ்டை செய்து அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து குட்டம் கிராம மக்கள் வழிபட்டனர்.

Updated On: 10 Dec 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்