Begin typing your search above and press return to search.
சிவகிரி அருகே கஞ்சா விற்ற பெண் கைது: காவல்துறையினர் விசாரணை
சிவகிரி அருகே கஞ்சா விற்ற பெண்ணை கைது செய்த காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதிகளில், கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதையடுத்து, அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர், விசாரணை நடத்தினர். இதில், சிவகிரியை சேர்ந்த சேர்ந்தவர் சக்திவேல் மனைவி விஜயா (38) கஞ்சா விற்பது தெரிய வந்தது. இதையடுத்து சிவகிரி போலீசார் வழக்குபதிவு செய்து, விஜயாவை கைது செய்தனர்.