/* */

பீடி கம்பெனி மூடுவதற்கு தொழிலாளர்கள் கண்டனம்

பீடி கம்பெனி மூடுவதற்கு தொழிலாளர்கள் கண்டனம்
X

செங்கோட்டை அருகே தனியார் பீடி கம்பெனி எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் மூடுவதை கண்டித்து பீடி தொழிலாளர்கள் சங்கத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள அய்யாபுரத்தில் தனியார் பீடி கம்பெனியை சேர்ந்த தொழிலாளர்கள் சங்க கிளை அமைப்பு கூட்டம் கண்மணி தலைமையில் நடைபெற்றது.சிஐடியூ தென்காசி மாவட்ட செயலாளர் வேல்முருகன், பீடி சங்க மாவட்ட பொருளாளர் ஆரியமுல்லை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படும் தனியார் பீடி கம்பெனியை எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், தொழிலாளர் துறை முன் அனுமதி பெறாமல் திடீரென ஏப்ரல் இறுதியில் மூடிட முடிவு செய்வதற்கு வன்மையாக கண்டனத்தை தெரிவிப்பதோடு தமிழக அரசு தொழிலாளர் துறை இதில் தலையிட்டு தொடர்ந்து அய்யாபுரத்தில் பீடி கம்பெனி செயல்பட நடவடிக்கை எடுத்திட வேண்டும், 2021 ஏப்ரல் 1 முதல் தமிழக அரசு பீடி தொழிலாளர்களுக்கு உயர்த்திய பஞ்ச படி ரூ. 9.37 பை அனைத்து பீடி கம்பெனிகளும் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Updated On: 16 April 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...