/* */

மதுபாட்டிலை பதுக்கி விற்பனை செய்தவர் கைது

மதுபாட்டிலை பதுக்கி விற்பனை செய்தவர் கைது
X

முழு ஊரடங்கு அறிவித்திருந்த நிலையில் சட்ட விரோதமாக வீட்டில் 42 மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த நபரை திருப்புத்தூர் போலீசார் கைது செய்தனர்.

தமிழக அரசு கொரோனா பரவலைத் தடுக்க இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவித்திருந்த நிலையில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த நபரை திருப்புத்தூர் போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில் மது பாட்டில்களை சிலர் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக திருப்புத்தூர் நகர் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

தகவல் கிடைத்ததன் பேரில் நகர் காவல் ஆய்வாளர் புவனேஷ்வரி, சார்பு ஆய்வாளர் மலைச்சாமி உள்ளிட்ட போலீசார் சோதனை செய்தனர். அப்போது தென்மாபட்டு கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் என்ற 65 வயது முதியவர். இவர் மரவேலை செய்யும் ஆசாரியாக பணிபுரிந்து வருகிறார். அவர் வீட்டின் பின்புறம் மணலில் புதைத்து வைத்து தேங்காய் நாரை போட்டு மூடி 42 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து திருப்புத்தூர் நகர் காவல்துறையினர் மதுபாட்டில்களை பறிமுதல் செய்ததோடு வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 26 April 2021 3:31 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  3. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  4. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  5. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  6. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  8. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  10. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்