Begin typing your search above and press return to search.
மருத்துவ துறை சார்பில் வாகனங்கள்: .அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன் தொடக்கம்
மாவட்டம் முழுவதிலும் கிராமம் மற்றும் நகர்ப்புறங்களுக்கு சென்று மருத்துவம் செய்ய 48 வாகனங்களை தொடக்கி வைத்தார்
HIGHLIGHTS
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில், வாகனங்களை .அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன் தொடக்கி வைத்தார்.
மலேரியா, டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சல்,மற்றும் இதர நோய்கள் பரவாமல் தடுப்பதற்காக,வீடு தேடி மருத்துவம் என்ற தமிழக அரசின் திட்டத்தின் கீழ் மருத்துவ வாகனங்கள் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாவட்டம் முழுவதிலும் கிராம மற்றும் நகர்ப்புறங் களுக்கு சென்று மருத்துவம் செய்ய 48 வாகனங்களை, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி மற்றும் மருத்துவத்துறை மருத்துவர்கள் பங்கேற்றனர்.