Begin typing your search above and press return to search.
இந்தி எதிர்ப்புப்போராட்டத்தில் உயிரிழந்தவருக்கு சிவகங்கையில் சிலை வைக்க கோரிக்கை
1965 ம் ஆண்டு நடந்த இந்திஎதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த மாணவர்ராஜேந்திரனுக்கு சிலை வைக்க கோரிக்கை
HIGHLIGHTS
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் உயிரிழந்த ராஜேந்திரனுக்கு சிவகங்கையில் சிலை அமைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
சிவகங்கையில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ராஜேந்திரனுக்கு சிவகங்கையில் சிலை அமைக்க வலியுறுத்தி ராஜேந்திரன் சிலை அமைப்புக் குழுவினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: 1965ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த மாணவர் ராஜேந்திரனுக்கு, அவர் பிறந்த ஊரான சிவகங்கையில் அவருக்கு முழு உருவச் சிலையை நிறுவ கோரி இராஜேந்திரன் சிலை மீட்பு குழுவினர் மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டியிடம் மனு அளித்தனர்.