சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 11.96 லட்சம் பேர் வாக்களிக்க தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவுரைப்படி 1-1-2022 தகுதி நாளாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி வெளியிட்டார்.
அதில் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 56 ஆயிரத்து 865 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 63 ஆயிரத்து 201 பெண் வாக்காளர்களும் மற்றவர்கள் 45 வாக்காளர்களும் என 3லட்சத்து 20 ஆயிரத்து 116 வாக்காளர்களும் உள்ளனர். திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 44 ஆயிரத்து 2 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 50 ஆயிரத்து 685 பெண் வாக்காளர்களும் மற்றவர்கள் இரண்டு வாகனங்கள் என மொத்தம் 2 லட்சத்து 94 ஆயிரத்து 689 வாக்காளர்களும் உள்ளனர்.
சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் 1லட்சத்து 47 ஆயிரத்து 670 ஆண் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 682 பெண் வாக்காளர்களும் மற்றவர்கள் 2 என மொத்தம் 3 லட்சத்து ஆயிரத்து 354 வாக்காளர்களும், மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 38 ஆயிரத்தி நாற்பத்தி ஏழு ஆண் வாக்காளர்களும் 1 லட்சத்து 42 ஆயிரத்து 600 பெண் வாக்காளர்களும் மற்றவர்கள் ஒரு வாக்காளர்கள் 2 லட்சத்து 80 ஆயிரத்து 648 வாக்காளர்கள் என மொத்தம் 4 சட்டமன்ற தொகுதிகளில் சேர்த்து 5 லட்சத்து 86 ஆயிரத்து 584 ஆண் வாக்காளர்களும் 6 லட்சத்தி10 ஆயிரத்து 168 பெண் வாக்காளர்களும் மற்றவர்களை 50 வாக்காளர்கள் என மொத்தம் 11 லட்சத்து 96 ஆயிரத்து 802 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள் என மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.