தேர்தலை நடத்தும் ஸ்டாலினுக்கு பாராட்டு, நடத்தாத அதிமுகவுக்கு குட்டு
தேர்தல் வாக்குறுதியின்படி தேர்தலை நடத்தும் ஸ்டாலினை பாராட்டிய ப. சிதம்பரம், 5 ஆண்டுகளாக தேர்தலை நடத்தாத அதிமுகவை கண்டித்தார்
HIGHLIGHTS
சிவகங்கையில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பேசியபோது திமுகவின் தேர்தல் வாக்குறுதியின்படி உள்ளாட்சி தேர்தலை ஓர் ஆண்டுக்குள் நடத்திய மு.க.ஸ்டாலினை பாராட்டுகிறேன். 5 ஆண்டுகளாக தேர்தலை நடத்தாத அதிமுகவை கண்டிக்கின்றேன் என்று கூறினார்.
மேலும், உள்ளாட்சி தேர்தலை நடத்தியவுடன் தங்களது பணி முடிந்துவிட்டதாக மாநில அரசு நினைத்து விடக் கூடாது, அவர்களுக்கான நிதி, திட்ட வரையறைக்காக, உரிய அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று கூறிய ப.சிதம்பரம், பெண்களாலும் உள்ளாட்சி நிர்வாகத்தில் சாதிக்க முடியும் என்பதை, இத்தேர்தலில் வெற்றி பெறும் பெண்கள் நிரூபிக்க வேண்டும் என்றும் கூறினார்.
வெற்றி பெறும் வேட்பாளர்கள் தங்கள் பகுதியில் அலுவலகம் அமைத்து மக்கள் பணி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டவர், உள்ளாட்சிக்கான நலத்திட்டங்களை பல அதிகாரிகள் நிறைவேற்ற மறுப்பதால், உள்ளாட்சி அமைப்பிற்கு அரசியல் சாசனம் வழிவகுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.