/* */

சிவகங்கையில் மாணவர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சியில் கலெக்டர் பங்கேற்பு

சிவகங்கையில் மாணவர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சியில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி பங்கேற்று பேசினார்.

HIGHLIGHTS

சிவகங்கையில் மாணவர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சியில் கலெக்டர் பங்கேற்பு
X

வழிகாட்டல் நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி பேசினார்.

சிவகங்கை மாவட்டம், மன்னர் மேல்நிலைப்பள்ளியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல விடுதிகளில் தங்கிப்பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டல் நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வின் போது, மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில்,

சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட பிற்படுத்தபட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல 20 பள்ளி விடுதிகளில் கல்வி பயிலும் 10-ஆம் வகுப்பைச் சேர்ந்த 89 மாணவ, மாணவியர்களும், 12-ஆம் வகுப்பைச் சேர்ந்த 107 மாணவ, மாணவியர்களும் மற்றும் 4 கல்லூரி விடுதிகளைச் சேர்ந்த 21 மாணவ, மாணவியர்களும் என 217 மாணவ. மாணவியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

10, 12 மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் அடுத்து என்ன தேர்வு செய்து கல்வி கற்கலாம் என்பதனை குழப்பம் இல்லாமல் தங்களுக்கு விருப்பமான, தங்களது இலட்சியங்களை நிறைவேற்றும் வகையிலான பாடப்பிரிவுகளை தேர்வு செய்திட வேண்டும். ஒவ்வொரு பாடப்பிரிவுகளிலும் உள்ள எதிர்கால வாய்ப்புகள், சூழ்நிலைகள் குறித்து அறிந்து தெளிவு பெறவேண்டும்.

படிக்கும் போது, பாடப்பிரிவுகளில் எவ்விதச் சந்தேகமும் இல்லாமல் தெளிவு பெற்று பிறரைச் சார்ந்திருக்காமல் தன்னால் முடியும் என்ற நிலையினை பெறவேண்டும். கல்வி மட்டுமல்லாமல் சுயதொழில், பிற இன்ன வாய்ப்புக்கள் ஏராளமான அளவில் உள்ளன. அரசுப்பணி மட்டுமல்லாமல் அதைவிட உயர்ந்த பதவிகள் ஏராளமாக உள்ளன.

அதனைத் தெரிந்து தங்களது கல்வியினை தொடர வேண்டும். தேர்வின் போது, தாங்கள் எழுத விரும்பும், கூற விரும்பும் கருத்துக்களை மிகைப்படுத்தாமல் சரியான அளவில் சுருக்கமாக, தெளிவாக எழுதிட வேண்டும்.

எந்தவிதமான எண்ணங்களாக இருந்தாலும், அதனை ஒழுங்குபடுத்தி விடாமுயற்சியுடன், கடின உழைப்பின் மூலம் அதனை செய்திட வேண்டும். சிறு, சிறு தடங்கல்கள் மற்றும் சூழ்நிலைகளை கருத்தில் கொள்ளாமல், தாங்கள் விரும்பிய இலட்சியங்களை நோக்கி ஒவ்வொரு அணுதினமும் செயல்பட்டு கொண்டு இருக்க வேண்டும். பள்ளி பாடப்புத்தகங்கள் தவிர்த்து பிற இன்ன புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தினமும் குறைந்தபட்சம் 1 மணி நேரமாவது புத்தகங்களை வாசிக்கும் போது கூடுதலான தகவல்களுடன் தேர்வினை எதிர்கொள்ள முடியும். உடல் மற்றும் மனதினை புத்துணர்வுவோடு வைக்கும்பட்சத்தில் கல்வி கற்பது மிகவும் எளிமையானதாக மாறும். கணினி பயற்சி என்பது மிகவும் அவசியமானதாகும். இதன் மூலம் உலகளாவிய வாய்ப்புக்கள் மற்றும் தொழில் நுட்பங்களை அறிந்து கொள்ள முடியும். அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தான் திறமையான ஆசிரியர்கள்.எனவே, பள்ளி மற்றும் கல்லூரி இறுதியாண்டு படிக்கும் மாணவ, மாணவியர்கள் தங்களுக்கான உயர்கல்வி மற்றும் போட்டித்தேர்வுகளுக்கான வாய்ப்புக்களை நன்கு அறிந்து கொண்டு செயல்பட வேண்டும். அதற்கான கருத்துரை விளக்கம் ஏற்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனை நல்லமுறையில், பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

இந்நிகழ்வில், முதன்மைக்கல்வி அலுவலர் சே.மணிவண்ணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சு.தனலெட்சுமி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரா.மணிகணேஷ், காரைக்குடி ஸ்ரீ மீனாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் (தமிழ்) சா.தே.ஸ்டெல்லா ராணி, ராமநாதன் செட்டியார் உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) கா.செந்தில்குமார், திருக்கோஷ்டியூர் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் (விலங்கியல்) முனைவர்.இராம.பழனியப்பன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் இராஜேஸ்வரி உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 7 April 2022 3:37 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!