/* */

திருப்புவனம்: வைகை ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த மக்கள்

தடை விதிக்கப்பட்ட போதும், திருப்புவனம் வைகை ஆற்றங்கரையோரம்முன்னோர்களுக்கு, பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

HIGHLIGHTS

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வைகை ஆற்றங்கரையில், முன்னோர்களுக்கு திதி கொடுத்தால், காசியில் கொடுத்த புண்ணியம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. அதனால் திருப்புவனம் வைகை ஆற்றங்கரையில் ஆடி அம்மாவாசை தை அமாவாசை புரட்டாசி அமாவாசை போன்ற நாட்களில் சிவகங்கை மாவட்டம் மட்டுமின்றி மதுரை தேனி விருதுநகர் புதுக்கோட்டை ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் இருந்தும் வந்து திதி கொடுப்பது வழக்கம்.

கொரோனா தொற்று பரவலை தடுக்க, பொது இடங்களில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று தர்ப்பணம் கொடுக்க நீர் நிலைகளில் பொதுமக்கள் கூடுவதற்கு தடைவிதிப்பு அமலில் உள்ளது. இதனால், பல ஊர்களில் இருந்து வந்த பொதுமக்கள், தாங்களாகவே வைகை ஆற்றில் இறங்கி தங்களுடைய முன்னோர்களுக்கு திதி கொடுத்து சென்றனர்.

திதி கொடுத்தவர்கள், திருப்புவனத்தில் இருக்கும் அருள்மிகு சௌந்தரநாயகி புஷ்பவனேஸ்வரர் ஆலயத்தில் மோட்ச தீபம் போடுவதும் வழக்கமாகும். அதற்கும் தடை செய்யப்பட்டுள்ளதால் மோட்ச விளக்கை கோவிலின் வாசலிலேயே வைத்துவிட்டு பக்தர்கள் வழிபட்டுச் சென்றனர். மழைக்காலம் என்பதால் நீர்வரத்து அதிகம் இருக்கிறது; எனினும், ஆபத்தையும் அறியாமல் பொதுமக்கள் வைகை ஆற்றில் இறங்கி தர்ப்பணம் செய்து வருகின்றனர். இதனால் விபத்து அபாயம் உள்ளதாக, சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர்.

Updated On: 8 Oct 2021 11:39 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!
  2. லைஃப்ஸ்டைல்
    காத்திருப்பது என்பது பொறுமையைப் பெறுவதற்கான ஒரு வழி
  3. லைஃப்ஸ்டைல்
    கர்ணன் கொண்ட தோழமைக்காக ஆவி தன்னைத் தந்தானே! அது தான் நட்பின்...
  4. லைஃப்ஸ்டைல்
    முதுமையின் மூன்றாம் கால்..! அவளுக்கு அவனும்; அவனுக்கு அவளும்..!
  5. ஈரோடு
    ஈரோட்டில் சுசி ஈமு நிறுவன அசையா சொத்துகள் ஏலம் ரத்து!
  6. வீடியோ
    SavukkuShankar-க்கு ஆதரவாக களம் இறங்கிய எதிர்க்கட்சிகள்...
  7. வீடியோ
    உடைந்த கைகளுடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான...
  8. வீடியோ
    உடைந்த கைகளுடன் நீதிமன்றத்தில் ஆஜரான SavukkuShankar !#savukkushankar...
  9. லைஃப்ஸ்டைல்
    குறுமொழி தத்துவங்கள்..! அத்தனையும் இரத்தினங்கள்..!
  10. திருப்பூர்
    திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 19 அரசுப் பள்ளிகள் 100...