/* */

காரைக்குடியில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 14 சவரன் நகை பறிப்பு

காரைக்குடியில் நடந்து சென்ற மூதாட்டியின் கழுத்திலிருந்த 14 சவரன் நகைகளை மர்ம நபர்கள் பறித்துச்சென்றனர்.

HIGHLIGHTS

காரைக்குடியில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 14 சவரன் நகை பறிப்பு
X

செயின் பறிப்பு குறித்து வழக்குப்பதிவு செய்யும் போலீசார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி முத்துப்பட்டினம் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர்கள் ராஜேந்திரன், சந்திரா தம்பதியினர். இவர்கள் இன்று பக்கத்து தெருவில் இருக்கும் தங்களது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு வீட்டில் இருந்து நடந்து சென்றுள்ளனர்.

முத்தூரணி பள்ளி பகுதியில் தம்பதியினர் வந்து கொண்டிருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் மூதாட்டி சந்திராவை தாக்கி கீழே தள்ளிவிட்டு அவரது கழுத்தில் கிடந்த 14 சவரன் நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளனர்.

அதிகாலை நேரம் என்பதால் அப்பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லை என கூறப்படுகிறது. தகவலறிந்த காவல்துறையினர் சம்பவம் இடம் வந்து மூதாட்டியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 8 Sep 2021 6:22 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!