/* */

மல்லூர் பேரூராட்சியில் 7 சுயேட்சை கவுன்சிலர்கள் திமுகவில் இணைவு

மல்லூர் பேரூராட்சியில் வெற்றி பெற்ற சுயேட்சை கவுன்சிலர்கள் 7 பேர் அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

HIGHLIGHTS

மல்லூர் பேரூராட்சியில் 7 சுயேட்சை கவுன்சிலர்கள் திமுகவில் இணைவு
X

மல்லூர் பேரூராட்சியில் வெற்றி பெற்ற சுயேட்சை கவுன்சிலர்கள் 7 பேர் அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

சேலம் மாவட்டம், மல்லூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள். இதில் 7 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

5 வார்டுகளில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். 3 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இந்த நிலையில் இன்று தலைவருக்கான நடைபெற்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட லதாவும், அதிமுக சார்பில் கவி பிரியாவும் போட்டியிட்டனர். திமுக ஆதரவுடன் சுயேச்சை வேட்பாளர் லதா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் லதா தலைவராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், தலைவர் லதா உள்ளிட்ட 7 பேரும் அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்து கொண்டனர். தொடர்ந்து புதியதாக திமுகவில் இணைந்தவர்களுக்கு அமைச்சர் வாழ்த்து தெரிவித்தார்.

Updated On: 4 March 2022 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...