/* */

ஊராட்சித் தலைவி உள்ளிட்ட இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு

அயோத்தியாப்பட்டணம் அருகே ஊராட்சித் தலைவி உள்ளிட்ட இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

HIGHLIGHTS

ஊராட்சித் தலைவி உள்ளிட்ட இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு
X

பைல் படம்.

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் அடுத்த பள்ளிப்பட்டியில் வசித்து வருபவர் அலமேலு (வயது 40). இவர், தனது உறவினர்களுடன் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் மாவட்ட எஸ்.பி.யை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அந்த மனுவில், பள்ளிப்பட்டி ஊராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக 100 நாள் வேலை திட்டத்தில் பணித்தள பொறுப்பாளராக பணியாற்றி வந்தேன். ஊராட்சி நிதியில் ரூ. 2 கோடி மோசடி செய்துவிட்டதாக கூறி என் மீது கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி பணியிலிருந்து நீக்கியுள்ளனர்.

இதனையடுத்து வீராணம் போலீசார் நடத்திய விசாரணையில், என் மீது பொய் புகார் கூறியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவரை அழைத்து போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். ஆனால் பட்டியலின சமூகத்தை சேர்ந்த என்னை அவமானப்படுத்திய ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது உறவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இ்வ்வாறு அதில் அவர் கூறியிருந்தார்.

இந்த புகாரின் பேரில் அம்மாப்பேட்டை போலீஸ் உதவி கமிஷனர் சரவணக்குமரன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டும், சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் சேலம் மாவட்ட கூட்டு நடவடிக்கைக்குழு ஒருங்கிணைப்பாளர் சரஸ்ராம் ரவி தலைமையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு நேற்று காலை போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அலமேலு மீது பொய் புகார் கூறியதாக பள்ளிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவி ரோசினி மற்றும் அவரது உறவினர் கிருஷ்ணன் ஆகியோர் மீது சாதிய வன்கொடுமை சட்டத்தின் கீழ் நேற்று முன்தினம் வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரூ. 2 கோடி மோசடி செய்ததாக பெண் மீது பொய் புகார் கொடுத்ததாக பள்ளிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவி உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பது ஊரக வளர்ச்சித்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 9 April 2023 8:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்