/* */

சேலம் மாநகராட்சி பகுதியில் கபசுர குடிநீர், அமுக்காரா சூரணம் வழங்கும் முகாம்

சேலம் மாநகராட்சியில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர், அமுக்கரா சூரணம் வழங்கும் முகாமை ஆணையர் துவக்கிவைத்தார்

HIGHLIGHTS

சேலம் மாநகராட்சி பகுதியில் கபசுர குடிநீர், அமுக்காரா சூரணம் வழங்கும் முகாம்
X

சேலம் மாநகராட்சி சார்பாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்  கபசுர குடிநீர், அமுக்காரா சூரணம் வங்கும் முகாமமை ஆணையர் தொடங்கிவைத்தார்.

கொரோனா நோய் தொற்று தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு வாரம் 01.08.2021 முதல் 07.08.2021 வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஆறாவது நாளான இன்று சித்த மருத்துவத்தின் மூலம் நோய் எதிர்ப்பு ஆற்றலை பெருக்கக் கூடிய கபசுர குடிநீர், அமுக்கரா சூரண மாத்திரை வழங்கும் முகாம் நடைபெற்றது.

சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலம் சுவர்ணபுரி மாநகராட்சி துவக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமை மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் துவக்கிவைத்தார்.

இதில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கடுக்காய் பொடி, சுக்குப் பொடி, துளசிப் பொடி, நெல்லிப் பொடி, சூரணம் ஆகிய பொருட்கள் அடங்கிய பெட்டகமும், கபசுர குடிநீரும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

தொடர்ந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வாசகம் அடங்கிய துண்டு பிரசுரமும் வழங்கப்பட்டது.

சித்த மருத்துவ துறையின் மூலம் வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளை பொதுமக்கள் தவறாமல் கடைபிடித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துகொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் கேட்டுக்கொண்டார்.


Updated On: 6 Aug 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!