Begin typing your search above and press return to search.
சேலம் மாவட்டத்தில் நாளை 138 மையங்களில் தடுப்பூசி முகாம்
சேலம் மாவட்டத்தில் நாளை 138 மையங்களில் 31,700 பேருக்கு தடுப்பூசிகள் போடப்படுகிறது.
HIGHLIGHTS
சேலம் மாவட்டத்தில் பல்வேறு மையங்களில் பல்வேறு கட்டங்களாக கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது குறித்து விரிவான நடைமுறைகள் ஏற்கனவே ஊடகங்கள் மூலமாக வெளியிடப்பட்டுள்ளது .
தற்போது, சேலம் மாவட்டத்திற்கு கிடைத்துள்ள 31,700 தடுப்பூசிகள் பெறப்பட்டு, மையங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டு உள்ளது. கையிருப்பின் அடிப்படையில் நாளை 17.07.2021 சனிக்கிழமை பொதுமக்களுக்கு 138 மையங்களில் கோவிஷில்டு தடுப்பூசி மற்றும் இரண்டாம் தவணை கோவாக்சின் தடுப்பூசி போடப்படும்.
மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி பொதுமக்கள் தங்கள் வசிக்கும் பகுதிக்குட்பட்ட தடுப்பூசி மையங்களை அணுகி , முக்கவசம் அணிந்தும், உரிய சமூக இடைவெளி கடைபிடித்து தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.