/* */

3 போஸ்ட் ஆபீஸ் மூடப்பட்டதை கண்டித்து சேலத்தில் ஊழியர்கள் போராட்டம்

சேலத்தில், 3 அஞ்சல் அலுவலகங்கள் மூடப்பட்டதை கண்டித்து, தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு, ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

3 போஸ்ட் ஆபீஸ் மூடப்பட்டதை கண்டித்து சேலத்தில் ஊழியர்கள் போராட்டம்
X

சேலத்தில்,  3 அஞ்சல் அலுவலகங்கள் மூடப்பட்டதை கண்டித்து,  சேலம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு, ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் பஜார், அன்னதானபட்டி, அம்மாபேட்டை பஜார் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த அஞ்சல் அலுவலகங்கள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென மூடப்பட்டுள்ளன. இந்திய அஞ்சல் துறையின் இந்த நடவடிக்கையை கண்டித்து, ஊழியர்கள் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு இன்று கருப்பு அட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, அஞ்சல் அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும், மூடப்பட்ட அலுவலகங்களில் பணியாற்றிய ஊழியர்களை மாவட்ட எல்லைகளில் உள்ள அலுவலகங்களில் பணியமர்த்துவதை கைவிட வேண்டும், மூடப்பட்ட அஞ்சல் அலுவலகங்களை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷம் எழுப்பினர்.

Updated On: 24 Jun 2021 12:53 PM GMT

Related News

Latest News

  1. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  2. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  3. வணிகம்
    கடனில் மூழ்கி வாழ்க்கை போச்சா? மீள ஒரு வழி இருக்கு!
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. வணிகம்
    சில ஆயிரங்கள பல லட்சம் கோடிகளா மாத்தணுமா? கூட்டு வட்டி பத்தி...
  6. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
  7. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...
  8. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!
  10. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!