Begin typing your search above and press return to search.
சிறை கைதியிடம் செல்போன் சிம் சிக்கியது
நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டையை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறை 'டி' பிளாக்கில் அடைக்கப்பட்டிருந்தார். நேற்று இரவு அவர் வைத்திருந்த சாம்சங் மொபைல் போன், ஏர்டெல் சிம்கார்டை அதிகாரிகள் பறிமுதல் செய்து அஸ்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.