/* */

மாநகராட்சி அலுவலகத்தை தூய்மை பணியாளர்கள் முற்றுகை

மாநகராட்சி அலுவலகத்தை தூய்மை பணியாளர்கள் முற்றுகை
X

சேலம் மாநகராட்சியில் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்களுக்கு மூன்று மாதமாக ஊதியம் வழங்காததை கண்டித்து கைகளில் பானையை ஏந்தியபடி ஊர்வலமாக வந்து மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாநகராட்சியில் பணிபுரிந்து வரும் அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் என அனைவருக்கும் கடந்த ஓராண்டாக முறையாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இரண்டு மாதத்திற்கு ஒரு முறை அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறை, ஒரு மாத சம்பளம் மட்டுமே வழங்கப்படுவதாகவும், இதனால் சேலம் மாநகராட்சியில் பணிபுரியும் அலுவலர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு, இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் முறையாக சம்பளம் வழங்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, சேலம் கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்கள், சுமார் நூறுக்கும் மேற்பட்டோர், கைகளில் பானைகள் ஏந்தியபடி, ஊர்வலமாக சேலம் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து, அலுவலகத்திற்குள் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பணியாளர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் வழங்கிட வேண்டும் என்றும், கொரோனா பரவல் காலத்தில் பணியாற்றியவர்களுக்கு ஒரு மாத ஊக்கதொகை வழங்கப்படும் என்று அறிவித்து இது வரை ஊக்கத்தொகை வழங்காததை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது. இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை காவல்துறையினர் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

Updated On: 8 Feb 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!