/* */

சேலம் மாவட்டத்தில் சிறார் தடுப்பூசி முகாம் தொடங்கியது

சேலம் மாவட்டத்தில் 15 வயதிற்கு மேற்பட்ட 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடங்கியது; முதல் நாளில், 21,500 மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

HIGHLIGHTS

சேலம் மாவட்டத்தில் சிறார் தடுப்பூசி முகாம் தொடங்கியது
X

சேலம் கோட்டை பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்.

தமிழகத்தில் இன்றுமுதல், 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், ஜனவரி 10 ஆம் தேதி முதல் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிகளுக்கே சென்று சிறுவர்களுக்கு நேரடியாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, சேலத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சேலம் கோட்டை பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை மாநகராட்சி நகர்நல அலுவலர் யோகானந்த் தொடங்கி வைத்தார்.

சேலம் மற்றும் ஆத்தூர் சுகாதார மாவட்ட அளவில் மொத்தமாக ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 200 பேர் 15 வயது முதல் 18 வயதுக்குட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. முதல்நாளான இன்று 69 மையங்களில் 21,500 மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.பள்ளிகளில் நடைபெறும் முகாம்களில் மாணவ மாணவியர் ஆர்வத்தோடு தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.


Updated On: 3 Jan 2022 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?
  2. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்
  3. தொழில்நுட்பம்
    3டி அச்சிடப்பட்ட ராக்கெட் எஞ்சினை வெற்றிகரமாக சோதித்த இஸ்ரோ: 3டி...
  4. தொழில்நுட்பம்
    எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சி, e200..! ஐஐடி மெட்ராஸ் சாதனை..!
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலிருந்து எலக்ட்ரானிக் சாதனங்களை பாதுகாப்பது எப்படி?
  6. வணிகம்
    விரைவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழக்கமான விமான சேவையை தொடரும்:...
  7. லைஃப்ஸ்டைல்
    கல்லூரிகளில் மதிப்பெண்களை வைத்து பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பது எப்படி?
  8. வீடியோ
    ஒரே நாளில் 25,000 கிலோ தங்கம் |என்ன நடக்கிறது தமிழகத்தில்?#gold...
  9. இந்தியா
    28,200 மொபைல் இணைப்புகளை துண்டிக்க தொலைத்தொடர்பு துறை உத்தரவு
  10. வீடியோ
    🔴LIVE : சென்னை விமான நிலையத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி ||...