/* */

சேலம் மாவட்டத்தில் நாளை 526 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

சேலம் மாவட்டத்தில் நாளை 526 மையங்களில் 72,080 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல்.

HIGHLIGHTS

சேலம் மாவட்டத்தில் நாளை 526 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
X

பைல் படம்.

சேலம் மாவட்டத்தில் பல்வேறு மையங்களில் பல கட்டங்களாக கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டத்திற்கு தற்போதுள்ள 72,080, டோஸ்கள் கையிருப்பின் அடிப்படையில் நாளை (08.09.2021) தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. ஊரகப்பகுதியில் உள்ள அனைத்து துணை சுகாதார நிலையங்கள் ( 398 ) அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ( 87 ) , நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் ( 4 ), அனைத்து அரசு மருத்துவமனைகள் ( 12 ), அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை மற்றும் சேலம் மாநகராட்சி பகுதியில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட்ட 24 மையங்கள் என மொத்தம் 526 மையங்களில் பொதுமக்களுக்கு கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்பட உள்ளது. மேலும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து கல்லூரி மாணவ, மாணவிகளும் தவறாமல் அருகில் உள்ள மையங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அனைத்து மையங்களிலும் மாணவ, மாணவிகளுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி போடப்படுவதோடு, தேவையான கல்லூரிகளுக்கு அவர்களின் வளாகத்திலேயே தடுப்பூசி போடப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

Updated On: 7 Sep 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!