/* */

சேலம் மாவட்டத்தில் நாளை 9 இடங்களில் "மக்களுடன் முதல்வர்" முகாம்கள்

சேலம் மாவட்டத்தில் "மக்களுடன் முதல்வர்" திட்டத்தின் கீழ் நாளை 9 இடங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளன.

HIGHLIGHTS

சேலம் மாவட்டத்தில் நாளை 9 இடங்களில்  மக்களுடன் முதல்வர் முகாம்கள்
X

பைல் படம்

"மக்களுடன் முதல்வர்" திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் 10வது நாளான வருகின்ற 29.12.2023 அன்று 9 இடங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளதாவது :

"கள ஆய்வில் முதலமைச்சர்" என்ற முன்னெடுப்பின் நீட்சியாக, அன்றாடம் அரசு துறைகளை அணுகும் பொது மக்களுக்கு அரசு அலுவலகங்கள் வழங்கும் சேவைகளை மேலும் செம்மைப்படுத்தி அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் சென்று சேரும் வண்ணம் "மக்களுடன் முதல்வர்" "இல்லம் தேடி சேவை"என்ற புதிய திட்டம் தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சீர்மிகு இத்திட்டத்தினை சேலம் மாவட்டத்தில் முதற்கட்டமாக சேலம் மாநகராட்சி, அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் நகரங்களை சுற்றியுள்ள கிராம பஞ்சாயத்து பகுதிகளில் சிறப்புடன் செயற்படுத்திட 18.12.2023 முதல் 06.01.2024 வரை 16 வேலை நாட்களில் 142 முகாம்களை நடத்த 142 உரிய இடங்கள் தெரிவு செய்யப்பட்டு, சீரிய முறையில் நடத்திட முகாம் கண்காணிப்பு அலுவலர்கள் (NODAL OFFICERS) மற்றும் முகாம் பொறுப்பு அலுவலர்கள் (INCHARGE OFFICERS) நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த முகாமில் வழக்கமாக செயல்படும் இ-சேவை மையங்களில் பெறப்படும் சேவைக்கட்டணத்தில் 50% மட்டும் பெற்றுக்கொள்ளப்படும். இந்த முகாமானது முற்பகல் 10.00 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3.00 மணி வரை செயல்படும். முகாமின் போது பெறப்படும் மனுக்களின் மீது உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 30 நாட்களுக்குள் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

"மக்களுடன் முதல்வர்" திட்டத்தின் கீழ், சேலம் மாவட்டத்தில் 10வது நாளான 29.12.2023, வெள்ளிக்கிழமை அன்று சேலம் மாநகராட்சி, சூரமங்கலம் வார்டு 24 பகுதிக்குட்பட்டவர்களுக்கு EQITOS குருக்கல் மண்டபத்திலும், அஸ்தம்பட்டி வார்டு 16 பகுதிக்குட்பட்டவர்களுக்கு மேற்கு மண்டல குளூனி மெட்ரிகுலேஷன் பள்ளியிலும், பகுதிக்குட்பட்டவர்களுக்கு எண்.2 அம்மாபேட்டை வார்டு 38 அருணாசலம் தெருவில் உள்ள செங்குந்த முதலியார் திருமண மண்டபத்திலும், கொண்டலாம்பட்டி வார்டு 54 பகுதிக்குட்பட்டவர்களுக்கு அருணாசலம் பிரதான சாலையில் உள்ள எஸ்.ஆர்.எஸ் திருமண மண்டபத்திலும் முகாம்கள் நடைபெறவுள்ளன.

மேலும், இடங்கணசாலை நகராட்சி, இடங்கணசாலை வார்டு 1, 2, 8, 9 ஆகிய பகுதிகளுக்குட்பட்டவர்களுக்கு நகராட்சி திருமண மண்டபத்திலும், தாரமங்கலம் நகராட்சி, தாரமங்கலம் வார்டு 23, 24, 25, 26 ஆகிய பகுதிகளுக்குட்பட்டவர்களுக்கு சிவகாமியம்மாள் திருமண மண்டபத்திலும், பி.என்.பட்டி பேரூராட்சி பகுதிக்குட்பட்டவர்களுக்கு சின்னையரெட்டி தெரு கருப்பு ரெட்டியூர் பிரதான சாலையில் உள்ள முத்துலட்சுமி மஹாலும், தெடாவூர் பேரூராட்சி வார்டு 14 பகுதிக்குட்பட்டவர்களுக்கு சமுதாயக் கூடத்திலும், எருமாபாளையம் கிராம ஊராட்சி பகுதிக்குட்பட்டவர்களுக்கு முத்தாயம்மாள் திருமண மண்டபத்திலும் என மொத்தம் 9 இடங்களில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

சேலம் மாவட்டத்தில் முகாம் நடைபெறும் 142 இடங்களின் விவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ள, உரிய விளம்பரம் நகராட்சி நிருவாகத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையால் செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சி, அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் நகரங்களை சுற்றியுள்ள கிராம பஞ்சாயத்து பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் முகாம் நடைபெறும் நாட்களை அறிந்து முகாமில் ஒருங்கிணைக்கப்படும் 13 துறைகளின் மூலம் வழங்கப்படும் சேவைகளை பெற தமிழ்நாடு அரசின் செம்மை மிக்க இத்திட்டத்தினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

Updated On: 28 Dec 2023 2:51 PM GMT

Related News