/* */

சேலத்தில் அதிநவீன ஐஸ்கிரீம் தொழிற்சாலை.. முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..

சேலம் ஆவின் பால் பண்ணையில் அதிநவீன புதிய ஐஸ்கிரீம் தொழிற்சாலையில் காணொலி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் இன்று உற்பத்தியை தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

சேலத்தில் அதிநவீன ஐஸ்கிரீம் தொழிற்சாலை.. முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..
X

ஐஸ்கிரீம் தொழிற்சாலையில் உற்பத்தியை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்.

தமிழகம் முழுவதும் ஆவின் நிறுவனம் சார்பில் பால் விநியோகம் மற்றும் பால் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், ஆவின் நிறுவனம் மூலம் பால்கோவா, அல்வா, மைசூர்பா, ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருட்களும் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


இந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் ஆவின் நிறுவனம் கிராம அளவில் 800 தொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் கட்டமைப்பில் செயல்பட்டு வருகிறது. இதில் நாள் ஒன்றுக்கு 2.5 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் சராசரியாக 5.20 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து அதில் 2.10 லட்சம் லிட்டர் பாலை நாள்தோறும் நுகர்வோர்களுக்கு சேலம் மாவட்டம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அளவில் பால் கூட்டுறவு அமைப்புகளுக்கு பால் கொள்முதலில் முதல் இடத்தை சேலம் ஆவின் நிறுவனம் பெற்றுள்ளது. ஆவின் நிறுவனத்தில் பால் மற்றும் பால் உப பொருட்கள் நெய், பால் பவுடர் மற்றும் பன்னீர், வெண்ணை, பால்கோவா, தயிர், மோர் ,நறுமண பால் வகைகள், இனிப்பு வகைகள், சாக்லேட் போன்ற பொருட்களை தயாரித்து நுகர்வோர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஆவினின் பங்களிப்பை அதிகப்படுத்தும் விதமாகவும், கூடுதல் லாபம் ஈட்டி பால் உற்பத்தியாளர்கள் நலனை காக்கும் விதமாக சேலத்தில் (சேலம் , ஈரோடு, கோயம்புத்தூர்) பால் ஒன்றியங்களில் நிதியில் இருந்து நாளொன்றுக்கு 6000 லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட அதிநவீன தொழில்நுட்ப ஐஸ்கிரீம் தொழிற்சாலை சுமார் 13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டது.

இந்த நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் சென்னையில் இருந்தபடி சேலம் ஆவின் தொழிற்சாலையில் உற்பத்தியை இன்று தொடங்கி வைத்தார். சேலம் ஆவின் நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர், ஆவின் நிர்வாகிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சேலம் ஐஸ்கிரீம் தொழிற்சாலையில் 50 மில்லி, 100 மில்லி, 500 மில்லி, மற்றும் 1 லிட்டர் அளவுகள் நுகர்வோர்களுக்கு தேவைக்கேற்ப பல்வேறு சுவைகளில் உற்பத்தி செய்து மேற்கு மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தி ஒன்றியங்கள் மூலம் நுகர்வோர்களுக்கு தரமான ஐஸ்கிரீம் விற்பனை செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 13 Dec 2022 2:10 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!