Begin typing your search above and press return to search.
பைக்குகளைத் திருடி பந்தாகாட்டிய வாலிபர்கள் கைது
இராணிப்பேட்டைப் போலீஸார் வாகன சோதனையில் விலையுயர்ந்த பைக்குகளைக் களவாடி ஆடம்பரமாக இருந்த 2 வாலிபர்களைப் கைது செய்தனர்.
HIGHLIGHTS
இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை ராஜேஸ்வரி தியேட்டர் அருகே போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ,பைக்கில் வேகமாகவந்த இளைஞர்கள்2பேரை மடக்கி விசாரித்ததில் இருவரும் அளித்த பதிலில் சந்தேமடைந்தப் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அதில் இருவரும் வேலூர்மாவட்டம். வேலூர் காகிதப்பட்டறையைச் சேர்ந்த சிவா(24),ராஜேஷ்(22) என்பதும் நண்பர்களான இருவரும் ஆடம்பரமான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு பல்வேறு இடங்களில் விலை உயர்ந்த பைக்குகளை மட்டுமே குறிவைத்து திருடி விற்றதாக தெரியவந்தது..
இதனையடுத்து இருவரையும் கைது செய்த இராணிப்பேட்டைப் போலீஸார் அவர்கள் பதுக்கி வைத்திருந்த சுமார்ரூ6லட்சம் மதிப்புள்ள புல்லட், பல்சர்போன்ற விலையுயர்ந்த பைக்குகளைப் பறிமுதல் செய்தனர்..