/* */

தேர்தலில் குற்ற செயல்களைத் தடுக்க முன்னெச்சரிக்கையாக ரவுடிகள் கைது செய்ய முடிவு

ராணிப்பேட்டை மற்றும் 3 மாவட்டங்களில் தலைமறைவாகியுள்ள450 ரவுடிகளை பிடிக்கதனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தேர்தலில் குற்ற செயல்களைத் தடுக்க முன்னெச்சரிக்கையாக ரவுடிகள் கைது செய்ய முடிவு
X

தேர்தலின்போது குற்ற செயல்களைத் தடுக்க ரவுடிகள் கைது செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

ராணிப்பேட்டை மற்றும் 3மாவட்டங்களில் தலைமறைவாகியுள்ள450 ரவுடிகளை பிடிக்கதனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும், 19 ல் நடக்கிறது. தேர்தலின் போது குற்றச்சம்பவங்கள் நடக்காமலிருக்க ரவுடிகள் குறித்த விவரங்களை சேகரித்து வருகின்றனர். அதில் வேலுார் மாவட்டத்தில் 756, ராணிப்பேட்டை, 345, திருப்பத்துார் மாவட்டத்தில் 300 என 1,401 ரவுடிகள் உள்ளதாக போலீசார் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தேர்தல் முடியும் வரை எந்தவித கலவரத்திலும் ஈடுபட மாட்டோம் என அவர்களிடம் போலீசார் 20 ரூபாய் பத்திரத்தில் எழுதி கையெழுத்து வாங்கி வருகின்றனர். இருப்பினும் அதிகளவு குற்றச்செயல்களில் ஈடுபடும் 450 ரவுடிகளை தேர்தல் முடியும் வரை கைது செய்து சிறையில் அடைக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். தலைமறைவாகி விட்ட ரவுடிகளைப் பிடிக்க 10 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

Updated On: 1 Feb 2022 10:24 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?