இராணிப்பேட்டை மாவட்டத்தில் போலீஸார் இடமாற்றம் எஸ்பி உத்தரவு.
இராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீஸார் 112 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்
HIGHLIGHTS
இராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் சப்டிவிஷனில் அரக்கோணம் டவுன், தாலூக்கா, மகளிர், போக்குவரத்து பிரிவு, தக்கோலம், நெமிலி, பாணாவரம், கொண்டபாளையம், சோளிங்கர், காவேரிப்பாக்கம் , அவளூர்மற்றும் இராணிப்பேட்டை சப் டிவிஷனில் வாலாஜாப்பேட்டை, இராணிப்பேட்டை , மகளிர், சிப்காட், இரத்தினகிரி, போக்குவரத்துப்பிரிவு, ஆற்காடு டவுன், தாலூக்கா, கலவை, வாழப்பந்தல், திமிரி உள்ளிட்ட 22காவல் நிலையங்கள் இயங்கி வருகிறது .
அவற்றில், பணியாற்றி வரும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள், தலைமைநிலைக் காவலர்கள் மற்றும் போலீஸார் உள்ளிட்ட 112 பேரை இடமாற்றம் செய்து மாவட்ட எஸ்பி ஓம்பிரகாஷ்மீனா உத்தரவிட்டுள்ளார் .
மேலும் இடமாற்றம் செய்யப்பட்டவர்கள் பணிவிடுவிப்பு மற்றும் இணைதல் ஆகியவற்றின் தகவல்களை அந்தந்த சப்டிவிஷன்அலுவலகம், மாவட்ட அலுவலகம் ஆகியவற்றிற்கு ஒரே நேரத்தில் தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்படுவதாகவும் அவர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார் .