/* */

வாலாஜா அருகே சேதமடைந்து 9 மாதங்களாகியும் சீரமைக்கப்படாத சாலை

கடந்த 9 மாதங்களாக சேதமடைந்த நிலையில் உள்ள வாலாஜா அருகே உள்ள அனந்தலை ஏரிக்கரை சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

HIGHLIGHTS

வாலாஜா அருகே சேதமடைந்து 9 மாதங்களாகியும் சீரமைக்கப்படாத சாலை
X

வாலாஜா அருகே சேதமடைந்து 9 மாதங்களாகியும் சீரமைக்கப்படாத சாலை

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டையிலிருந்து அனந்தலை வழியாக வள்ளுவம்பாக்கம், பொன்னப்பந்தாங்கல், பாணாவரம் செல்லவும் மற்றும் பணப்பாக்கம் வழியாக அரக்கோணம் செல்லும் முக்கிய சாலையாக இருந்து வரும் அனந்தலை சாலையை சுமார் 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

மாநில நெடுஞ்சாலைத் துறையினரின் பராமரிப்பில் இருந்து வரும் இந்த சாலை, கடந்த ஆண்டு ஏற்பட்ட புயல் மழையால் அனந்தலை ஏரிக்கரை நீர்க்கசிவு காரணமாக சாலைத்தடுப்புகளை உடைத்து நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து இல்லாததால் நல்வாய்ப்பாக விபத்துகள் நடக்கவில்லை. உடனே தகவறிந்த வந்த வாலாஜாப்பேட்டை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலை சேதமடைந்த சரிவடைந்த பகுதிகளை பார்வையிட்டு, வாகனங்கள் செல்லாதவாறு தடுப்பு எச்சரிக்கைகளை வைத்து விட்டு சென்றனர்.

தற்போது வரை சேதமடைந்த சாலை சீரமைக்கப்படாமலேயே காணப்படுகிறது. மேலும் அனந்தலை மற்றும் சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் பலமுறை நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தும் சாலை சீரமைக்கப்படாமலே உள்ளது.

தற்போது பருவமழை தொடங்கியுள்ள சூழலில் மேலும் சாலை சரிவடைய வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. எனவே ஆபத்தான நிலையில் உள்ள அச்சாலை வழியாகச் செல்பவர்கள் வேறு வழியின்றி பெரிதும் அச்சமடைந்தநிலையில் சென்று வருகின்றனர.

எனவே போர்க்கால நடவடிக்கையாக விரைந்து எதிர் வரும் மழைக்கு முன்பாக சாலையில் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்து மேற்கொண்டு சரிவுகள் ஏற்படாமல் தடுப்புகளை பலப்படுத்தி சீரமைக்குமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Updated On: 27 Jun 2021 4:21 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  2. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  5. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  6. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  7. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  8. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  9. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா