Begin typing your search above and press return to search.
பெட்ரோல் டீசல் விலை உயர்வு -ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து போராட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆட்டோ ஓட்டுனர்கள் ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து போராட்டம்.
HIGHLIGHTS
இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தொடர்ந்து ஆட்டோக்களை இயக்க முடியாமலும், ஆட்டோக்களை இயக்க முடியாததால் வாழ்வாதாரத்தை இழந்தும் வருகின்றனர். இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வலியுறுத்தி வேண்டும் என்பதை வலியுறுத்தி இராமநாதபுரம் அரண்மனை முன்பு சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநில பொதுச்செயலாளர் சிவாஜி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்தனர். இந்த போராட்டத்தில் 10க்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.