அவதுாறாக பேசிய திமுக ஒப்பந்ததாரர்: ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
இராமநாதபுரத்தில் அவதுாறாக பேசிய ஒப்பந்ததாரரை கைது செய்யக்கோரி ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்.
HIGHLIGHTS
இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் புதிய பேருந்து நிலையம் அருகில் இயங்கி வருகிறது. இதில் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சி சம்பந்தப்பட்ட பணிகளுக்கான ஒப்பந்தம் மற்றும் பல்வேறு கிராம வேலைகளுக்கான டென்டர்கள் விடுவது வழக்கம் வேலை முடிந்தவுடன் அதற்கான சான்றிதழ் மற்றும் காசோலைகள் அலுவலக அதிகாரிகள் மூலம் வழங்கப்படும்.
இந்நிலையில் இன்று மதியம் திமுக ஒப்பந்ததாரரான அப்பாஸ்கனி என்பவர் தான் பார்த்த வேலைக்கான சான்றிதழ் கேட்டு அலுவலகத்திற்கு வந்ததாகவும், அவர் அந்த சான்றிதழில் முறையற்ற பணி செய்யாததாகவும், முன் தேதியிட்டு கேட்டதாகவும் அதனை தர மறுத்த பெண் ஊழியர்களை தரக்குறைவாகவும் அசிங்கமாகவும் பேசியதாக கூறி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக அனைத்து ஊழியர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் தெரிவிக்கும் போது அவர் பார்த்த வேலைக்கான சான்றிதழில் முறையற்ற தேதியை மாற்றி தரக் கோரி கேட்டதாகவும் தர மறுத்ததால் பெண்ணென்றும் பாராமல் அசிங்கமாகப் பேசியும் மிரட்டியும் உள்ளார். எனவே அவரை தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக கைது செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரினர்.
மேலும் நடவடிக்கை எடுக்காவிட்டால் மாவட்டத்தில் இருக்கக்கூடிய அலுவலர்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என எனவும் தெரிவித்தனர்.