கைக்குழந்தையுடன் இளம்பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி
இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் கைக்குழந்தையுடன் வந்த இளம்பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி.
HIGHLIGHTS
இராமேஸ்வரத்தை சேர்ந்த இளம்பெண் உமாமகேஸ்வரி. இவருக்கும் கீழக்கரை வங்கியில் பணிபுரியும் ரமேஷ் என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. ஒரு வயது கைக்குழந்தை உள்ள நிலையில் திருமணத்தின் போது 15 பவுன் நகையும், ஒரு லட்சம் வரதட்சனை கொடுத்து திருமணம் நடந்துள்ளது.
இந்த நிலையில் கூடுதலாக கணவர் ரமேஷ் 5 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வீட்டை விட்டு விரட்டியதாகவும் இது குறித்து கீழக்கரை காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
புகாரின் மீது அதிகாரிகளோ, காவல்துறையினரோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் ஆத்திரம் அடைந்த இளம் பெண் கைக்குழந்தையுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார். அப்போது அங்கிருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தி தீப்பெட்டியை பறித்து அவரை தற்கொலையில் இருந்து காப்பாற்றினர். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அங்கு வந்து அவரிடமிருந்த மண்ணெண்ணெய் கேனை பறித்து அவரிடம் விசாரணை நடத்தினர்.